நூல் அறிமுகம்:
உங்களுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், உங்களுடைய மனத்தடைகளை அகற்றுவதற்கும் உதவுகின்ற, நடைமுறைக்கேற்ற, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உத்திகளை இந்நூல் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
உங்களுடைய எதிர்மறை எண்ணங்களைக் கட்டுப்படுத்தவும், உங்களுடைய சுயபிம்பத்தை உயர்த்திக் கொள்ளவும், மகிழ்ச்சியாக இருக்கவும் இந்நூல் உங்களுக்கு வழிகாட்டும்.
இந்நூலில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்;
உங்களுடைய உள்ளார்ந்த குரலைச் செவிமடுப்பதற்கான சரியான வழிமுறையைக் கண்டறிவது எப்படி?
அமைதியான மனநிலையை நிலைநிறுத்திக் கொள்வதற்கு மனத்தளவில் விலகி இருத்தல் எப்படி உதவும்?
எது நடந்தாலும், அதனால் என்ன? என்ற மனநிலையை வரித்துக் கொள்வது எப்படி?
தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் இடையேயான வேறுபாட்டைக் கண்டறிவது எப்படி?
கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றில் நீங்கள் எதில் அதிக நேரம் செலவழிக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வது எப்படி?
அலையோடு நீந்துதல் என்ற வெற்றி உத்தியை உங்கள் வாழ்வில் கடைபிடிப்பது எப்படி?
உங்களுடைய இயல்பான மனநிலை எது என்று கண்டுபிடித்து அதை உங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வது எப்படி?
இனி நீங்கள் பதற்றமடைய வேண்டியிருக்காது, மன அழுத்தம் கொள்ள வேண்டியிருக்காது. தூங்கா இரவுகள் இருக்காது. ‘அடுத்து என்னவாகுமோ!’ என்று கவலை கொள்ள வேண்டியிருக்காது. வாழ்க்கை அமைதியானதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். இவை அனைத்தும் உங்களுடைய எண்ணங்களிலிருந்தே தோன்றுகின்றன என்பதை தெளிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது.
*****
நூல்: அமைதியாக இருங்கள்
ஆசிரியர்: நிக் டிரென்டன்
மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
விலை: ரூ.315/-