இன, நிற வேறுபாட்டை காரணம் காட்டி எந்த ஒரு மனிதனும் இன்னொரு மனிதனை கீழ்த்தரமாக நினைப்பது தவறு, இப்படி கருதுவதற்கு எந்த விஞ்ஞானப்பூர்வமான காரணங்களும் இல்லை என்பதே உண்மை.
அப்படி இருக்கையில், இந்த உலகில் நிறத்தில் வேறுபாடு பார்ப்பது மனிதர்கள் மட்டுமே. இயற்கை எத்தனையோ விதமான நிறங்களில் காட்சி அளிக்கிறது.
அதனை நினைத்து நாம் ஒரு போது சிந்தித்தது இல்லை. ஆனால், ஏன் நாம் மனித நிறத்தை மட்டும் குறை சொல்கிறோம் என்பது புரியாத புதிர்.
வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய மனிதர்கள் மட்டுமே உலகில் கவர்ச்சிகரமானவர்கள், அழகானவர்கள், பிறரால் விரும்பக் கூடியவர்கள் என்று பல நினைக்கிறார்கள்.
இதனால் மற்றவர்களுக்கு அதாவது கருப்பு நிறத்தில் உள்ளவர்களுக்கு அது அவர்களுடைய மனதை மிகவும் பாதிக்கிறது.
வெளியில் சொல்ல முடியாத வலிகள், கேலி கிண்டல்களுக்கு உள்ளாக்கப்படும் போது முழுமையாக உடைந்து விடுகிறார்கள்.
இதுதான் எதார்த்தம். வழியில் என்னதான் மற்றவர்களோடு சிரித்து பேசினாலும் தாங்கள் கருப்பு நிறமாக இருக்கிறோமே என்பதை நினைத்து வருந்துகிறார்கள்.
நேற்று என்னுடைய சக மாணவி கல்லூரிக்கு வந்திருந்தால் ஆனால் அவள் யாரிடமும் பேசவில்லை. மிகவும் அமைதியாக இருந்தாள்.
எல்லோரும் ஏனடி இப்படி இருக்கிறாய்? என்ன நடந்தது என்று சொல்லேன்? என்று கேட்டபோது அவள் முகத்தில் வானை முட்டும் அளவு சோகமும், கண் முழுவதும் கண்ணீர் நிரம்பியும் இருந்தது.
அமைதியாக இருந்து விட்டாள். பின்னர் எல்லோரும் ஆங்கில வகுப்புக்குச் சென்றோம் ஆசிரியர் பாடம் நடத்துகையில் அவளை படிக்கச் சொன்னார். ஆனால், அவள் மறுத்துவிட்டாள், ஆசிரியர் அமைதியாக இருந்தார்.
பாட முடிந்த பின்னர் அவளை கூப்பிட்டு என்னம்மா நடந்தது என்று கேட்டபோது, ஒப்பாரி தோத்துவிடும் அந்த அளவு கண்ணீர் காரணம் தான் கருப்பு நிறமாக இருக்கிறேன் இதனை எல்லோரும் என்னை பார்த்து சுட்டிக்காட்டுகிறார்கள். இது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, தன்னுடைய வீட்டிற்கு தன்னுடைய அம்மாவின் ஆசிரியர் வந்திருந்தார் அவர் என்னைப் பார்த்து நீ என்ன இவ்வளவு கருப்பாக இருக்கிறாய் ஏன் இப்படி ஆனாய் என்று கேட்டபடி? அவள் மனம் அப்போது உடைந்துவிட்டது.
இந்த வலி இன்று நேற்று அல்ல சிறு வயது முதல் நான் அனுபவிக்கிறேன் என்று தன்னுடைய ஆதங்கத்தை ஆசிரியரிடம் பகிர்ந்து கொண்டார்.
அவள் கருப்புதான் ஆனாலும் கருப்பு பேரரசி என்று தான் சொல்ல வேண்டும்.
என்ன சொல்லியும் அவளை சமாதானம் படுத்தமுடியவில்லை, வலிக்கு ஆறுதல் சொல்ல முடியும். ஆனால், அந்த வலியை அனுபவிக்கும் மனிதனுக்கு மட்டுமே அதன் தாக்கம் தெரியும்.
இந்த நிற வேற்றுமை எப்போது இந்த உலகில் மாறும் என்று தெரியவில்லை? என்னதான் படித்தவர் வசதியானவர், திறமை வாய்ந்தவர் என்று பலர் இருந்தாலும் இந்த நிறம் மற்றும் உடலமைப்பு தான் மனநிலையை நிர்ணயிக்கிறது.
– தனுஷா
#நிறவெறி #இனவெறி #வேற்றுமை #கருப்பு #வெள்ளை #நிறபாகுபாடு #Colordiscrimination #whilte #black #diffence