தமிழகத்திற்கு ‘கிரிமினல் டூர்’!

 செய்தி:

அண்மையில் கேரள மாநிலத்தில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்துக் கொள்ளையடித்து விட்டு தமிழ்நாட்டுக்குள் சினிமா பாணியில் நுழைந்த வட மாநிலக் கொள்ளையர்களைப் பிடித்து காவல்துறை விசாரணை நடத்தியிருக்கிறது.

அப்போது தமிழகத்திற்கும் இதே மாதிரி ‘கிரிமினல் டூர்’ வந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள் அந்தக் கொள்ளையர்கள்.

கோவிந்த் கமெண்ட்:

தமிழகத்திற்கு பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். பலர் இங்குள்ள சுற்றுலாத் தலங்களையும் கோயில்களையும் பார்ப்பதற்காக வருகிறார்கள். பலர் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கென்றே ‘மெடிக்கல் டூர்’ என்ற பெயரில் வருகிறார்கள்.

தற்போது பிடிபட்டிருக்கும் வடமாநிலக் கொள்ளையர்கள் கண்டெய்னர் லாரி மற்றும் சொகுசான கார் சகிதமாக ‘கிரிமினல் டூர்’ வந்திருப்பார்கள் போலிருக்கிறது.

இப்படியெல்லாமா வடமாநிலக் கிரிமினல்களுக்கு வித்தியாசமான ‘டூர்’ ஆசை இருக்க வேண்டும்?

You might also like