செஸ் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும்!

பிரக்ஞானந்தா கோரிக்கை

45-வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் வென்ற செஸ் வீரர்களுக்கு, சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி, அர்ஜூன் கல்யாண், ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோருக்கு இந்த நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, செஸ் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்றும் தற்போது நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியும் ஒலிம்பிக் போன்ற ஒரு போட்டிதான்” என்றும் கூறினார்.

You might also like