கிராமத்து வாழ்க்கையைச் சிறப்பாகக் காட்டும் மண் பொம்மை!

நூல் அறிமுகம்:

கிராம வாழ்க்கையைச் சிறப்பான முறையிலே சித்திரித்துக்காட்டும் மண் பொம்மை எனும் இந்த நவீனம் ஆசிரியர் காளிந்ரீசரண் பாணிக்ராஹி அவர்களின் கற்பனையில் உருவானதுதான்.

அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்பட்ட பூசலை அண்ணன் பர்ஜீவைப் பரந்த மனப்பான்மை எப்படித் தீர்த்து வைத்தது என்பதைக் காவிய நயத்தோடு கதையாக்கியிருக்கிறார்.

ஒவ்வொரு கிராமத்திலும் பர்ஜீவைப் போன்று ஓர் அண்ணன் தோன்றிவிட்டால் கிராமங்கள் பூலோக சொர்க்கமாகத் திகழும் என்பதை உயரிய குணசித்திர பாத்திரம் ஒன்றைப் படைத்து விளக்கியுள்ளார் ‘மண் பொம்மை’ என்னும் இந்த நயம் மிகு நவீனத்தில்.

*****

நூல்: மண் பொம்மை (ஒடியா நாவல்)
ஆசிரியர்: காளிந்தீசரண் பாணிக்ரஹி

தமிழில்: ரா. வீழிநாதன்
சாகித்திய அகாடெமி பதிப்பகம்
பக்கங்கள்: 154
விலை: ரூ.57/-

You might also like