புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்குள்ளேயே மழைநீர் கசிவு!

செய்தி:

டெல்லியில் அண்மையில் பெய்துவரும் கனமழையையொட்டி ஓராண்டுக்கு முன்பு கட்டப்பட்டு அமர்க்களமாக திறக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் மழைநீர் கசிந்திருக்கிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கோவிந்த் கேள்வி:

மிக அண்மையில்தான் பீகாரில் கட்டப்பட்ட பல பாலங்களின் கதியைக் பார்த்திருக்கிறோம். அது பற்றியெல்லாம் யாராவது பகிரங்கமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்களா?

தற்போது நவீன முறையில் வலுவாக கட்டமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் கனத்த மழையின் விளைவாக மழைநீர் கசிந்தால் மழை மீது தான் வழக்கம்போல குற்றம் சுமத்துவார்களே ஒழிய கட்டடம் கட்டியவர்கள்மீது குற்றம் சுமத்துவார்களா?

You might also like