இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை!

செய்தி:

இந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா. 

கோவிந்த் கேள்வி:

புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை வெளிப்படையாக தெரிவிச்சு இருக்கிறீங்க. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் விலையையும் கொஞ்சம் பட்ஜெட்டில் குறைச்சு இருக்கீங்க. நல்லது தான்.

ஆனால், புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கான மூலகாரணமான பல்வேறு விதமான போதைப் பொருட்களின் விநியோகமும் புழக்கமும் அதிகரித்திருப்பதைப் பற்றியும், அதை கட்டுப்படுத்துவதைப் பற்றியும் இதே அளவிற்கு கவனம் செலுத்துவீர்களா?

You might also like