மௌனத்தை எளிதில் கற்றுக் கொள்ள முடியாது!

படித்ததில் ரசித்தது:

ஆசைப்பட்டவற்றை
நிலத்தில் அடைவது எளிதானதல்ல;
பலரும் கற்பனையிலேயே அவற்றை
அடைந்து கொள்கிறார்கள்;
அதுவே போதும் என்றுகூட நினைக்கிறார்கள்;
கற்பனைக்கும் நிலத்துக்குமான
இடைவெளியைக் கடந்து வருவது எளிதல்ல;
பேச்சைக் கற்றுக் கொள்வதைப் போல்
மௌனத்தை எளிதில் கற்றுக் கொள்ள முடியாது;
மௌனத்தில் சொற்கள் குளத்தில் மூழ்கிக் கிடக்கும்
கற்களைப் போல அமிழ்ந்து கிடக்கின்றன;
மௌனத்தில் மனம் சலனமற்றுக் கிடக்கின்றது!

– எஸ்.ராமகிருஷ்ணன்

#எஸ்_ராமகிருஷ்ணன் #s_ra #s_ra #s_ramakrishnan #எஸ்_ரா

You might also like