செல்பி வித் முருகன்…!

சூரசம்ஹார நாட்டிய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உலக புகழ் நாட்டிய சக்ரவர்த்தி திரு. தனஞ்செயன் மற்றும் சாந்தா தனஞ்செயன் நாட்டிய கலைஞர்களை வாழ்த்தினர்.

முருகராக தோன்றியவர் விழா முடிந்ததும் திரு.தனஞ்செயன் மாஸ்டர் திருமதி.சாந்தா தனஞ்செயனுடன் மேடையில் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

நடன முடிவில் வேலுடன் முருகனாக அனைவருக்கும் காட்சி தந்தாலும் இந்த காலத்தில் முருகனே நேரில் வந்தாலும் இப்படித்தான் செல்பி எடுப்பார் என பார்வையாளர்கள் பேசியது கேட்க முடிந்தது.

தனஞ்செயன் மாஸ்டர் தம்பதிகள் பெருந்தன்மையுடன் இருவரும் கைகோர்த்து நின்று போஸ் கொடுத்தனர்.

என்ன இருந்தாலும் செல்பி எடுப்பவர் வேலுடன் நிற்கும் முருகன் ஆச்சே. இப்படி ஒரு பணிவா இளம் தலைமுறை இப்படிப்பட்ட பண்புகளை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

– எஸ்.ராஜேந்திரன், புகைப்பட பத்திரிகையாளர்

#தனஞ்செயன் #சாந்தா_தனஞ்செயன் #Bharatanatyam_artist #Dhananjayan #Shanta_Dhananjayan The legendary #dancing_couple_of_India #The_Dhananjayans

You might also like