என்ன தான் சொல்கிறது கடல்?

என்ன துன்பமோ
கடலின் அலைகளுக்கு
வெளியே தெரியாமல் வருகின்றன;
கரையை நெருங்கும் பொழுது
ஆத்திரத்தோடு எழுகின்றன;
ஆனால் அலைகளை
தன் பக்கம்
இழுத்துக் கொள்கிறது கடல்;

போகாதே என்கிறதா?
செல்லாதே என்கிறதா?
இரண்டுமா?
என்ன சொல்கிறது கடல்!

– ஞானக்கூத்தன்

You might also like