அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கும் முன்னணி நடிகர்கள்!

ரஜினி, விஜய், அஜித், மோகன்லால் ஆகியோரின் புதிய படங்கள் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்குகிறது.

லைகா தயாரிப்பில் ஜெய்பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படம் உருவாக உள்ளது.

ஜெய்லரின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு உருவாக உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நாளை (அக்டோபர் – 4) தொடங்குகிறது.

லைகாவின் மற்றொரு படமான நடிகர் அஜித்தின் 62-வது திரைப்படம்  தயாராக உள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பும் அபுதாபியில் நாளை தொடங்குகிறது.

லியோ படத்திற்கு பிறகு ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 68-வது படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஜய் – வெங்கட் பிரபு – யுவன் கூட்டணியில் நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், டோவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாவது பாகம் தயாராக உள்ளது.

இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் இதன் படப்பிடிப்பு வரும் 5-ம் தேதி நடைபெறுவதாக தெரிவித்துள்ளது.

எனவே மிகப்பெரிய நட்சத்திரங்களின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

– தேஜேஷ்

You might also like