சாமானியர்களின் குரலையும் காது கொடுத்துக் கேட்கிறோம்!

உச்சநீதிமன்றம் உருக்கம்:

உச்சநீதிமன்ற நீதிபதி மேத்யூஸ் நெடும்பாரா அண்மையில் உச்சநீதிமன்ற தலைமைச் செயலருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், “உச்சநீதிமன்றம், அரசியல் சாசன அமர்வு விசாரணைகளுக்காக நேரத்தை விரயம் செய்கிறது. அதற்கு பதிலாக பொதுநல மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், “சட்டப்பிரிவு 370 ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரித்தது நேர விரயம் என்று நீங்கள் கருதலாம்.

ஆனால், இந்த வழக்கின் மனுதாரர்களும், அரசாங்கமும் அவ்வாறு கருதவில்லை. அரசியல் சாசன அமர்வு விசாரணைகள் அனைத்துமே அரசியல் சாசனத்தை பகுப்பாய்வு செய்கிறது என்று அர்த்தமில்லை.

கடந்த 3 நாட்களுக்கு முன் நீங்கள் விசாரணையின்போது நீதிமன்றத்துக்கு வந்திருந்தால் நாட்டில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைத் தொடும் பிரச்சினை விவாதிக்கப்பட்டது.

இலகு ரக வாகன மோட்டார் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு வர்த்தக வாகனங்களையும் இயக்கலாமா என்ற வழக்கை விசாரித்தோம்.

எனவே உச்சநீதிமன்றம் பரபரப்பான அரசியல் சாசன விவகாரங்களை மட்டுமே விசாரிக்கின்றது, சாதாரண மக்களைக் கண்டு கொள்வதில்லை என்ற உங்களின் எண்ணம் தவறானது” என்றும் பதிலளித்துள்ளார்.

You might also like