மூன்று முதல்வர்களுடன் கே.பி.சுந்தராம்பாள்!

அருமை நிழல்:

கணீர்க்குரல் கொண்ட கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் மீது அன்பும், மதிப்பும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். 

கே.பி.எஸ். தனது சொந்த ஊரான கொடுமுடியில் தியேட்டர் கட்டினார். அதன் திறப்பு விழாவுக்குச் சென்ற மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், கே.பி.சுந்தராம்பாள் வீட்டுக்கும் சென்றார்.

அப்போது தனது வீட்டு பூஜையறையில் மக்கள் திலகத்துக்கு நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டு ஆசீர்வதித்தார் சுந்தராம்பாள். அரிதிலும் அரிதாக நெற்றியில் விபூதி, குங்குமத்துடன் பக்தி மணம் கமழ அமர்ந்திருக்கிறார் மக்கள் திலகம்.

தியேட்டரின் திறப்பு விழாவுக்கு எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா என்று மூன்று பேருமே சென்றிருந்தார்கள் என்பது சிறப்பு.

You might also like