மக்களிடம் சமத்துவம் உண்டாக வேண்டும்!

நினைவில் நிற்கும் வரிகள்:

ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்

(ஓடி ஓடி) 

வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு
நான் அன்போட சொல்லுறத கேட்டு
நீ அத்தனை திறமையும் காட்டு
இந்த அம்மாவ பாரு அய்யாவ கேளு
ஆளுக்கொண்ணு கொடுப்பாங்க

(ஓடி ஓடி) 

சோம்பேறியாக இருந்து விட்டாக்க சோறு கிடைக்காது தம்பி
சுறுசுறுப்பில்லாமே தூங்கிக்கிட்டு இருந்தா
துணியும் கிடைக்காது தம்பி
இத அடுத்தவன் சொன்னா கசக்கும்
கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்
இதுக்கு ஆதாரம் கேட்டால் ஆயிரம் இருக்கு
அத்தனையும் சொல்லி போடு

(ஓடி ஓடி) 

வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் உண்டாகணும்
அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
படிப்பினை தந்தாகணும் நாட்டுக்கு –
படிப்பினை தந்தாகணும்

(ஓடி ஓடி) 

– 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘நல்ல நேரம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் – கவிஞர் புலமைப்பித்தன்.

பாடியவர் டி.எம்.சௌந்திராஜன். இசை – கே.வி.மகாதேவன்.

You might also like