காதலின் அழகிய தருணங்களைப் பேசும் ‘பரிவர்த்தனை’!

பொறியாளர் செந்திவேல் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ள படம் பரிவர்த்தனை. வெத்து வேட்டு, தி பெட் ஆகிய படங்களைத் தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி படத்தை இயக்கியுள்ளார்.

செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தைப் பற்றிப் பேசிய இயக்குனர் மணிபாரதி,

“காதல் எப்போது வரும் எவர்மீது வரும் என்பது இப்போதுவரை எவருக்குமே தெரியவில்லை அந்த மாயவலையில் சிக்கிக்கொண்டவர்களின் மனப்பிரவாகம்தான் இப்பரிவர்த்தனை படம்” என்றார்.

மேலும் அவர், “கடந்த சில வருடங்களாக சாதிய வன்மங்களையும், போதை பழக்கவழக்கங்களை மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் தமிழ்த் திரைப்படத்திற்கு மத்தியில் காதலையும் காதல் சார்ந்து ஏற்படக் கூடிய மன உணர்வுகளையும் மட்டுமே இப்படத்தில் பேசியிருக்கிறோம்” என்றார்.

இப்படி காதலும் காதல் சார்ந்துமே உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு உயிர்கொடுக்கும் விதமாக இதன் நாயகன் நாயகியாக சின்னத்திரை நட்சத்திரங்களான சுர்ஜித், சுவாதி, ராஜேஸ்வரியும், இவர்களுக்கு துணையாக தேவிப்ரியா, பாரதிமோகன் திவ்யாஸ்ரீதர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

மெருகேற்றும் விதமாக இதன் படப்பிடிப்பு முழுவதும் இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையின் தென்பகுதியான புளியஞ்சோலையில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like