தமிழே நீ பகைவென்று முடிசூடி வா!

நினைவில் நிற்கும் வரிகள்:
***

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலை கடல் ஓய்வதில்லை
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடப் பிறந்தவளே ஆடி வா
புகழ் சேரப் பிறந்தவளே பாடி வா
இடை என்னும் கொடியாட நடமாடிவா
குழல் இசைக்கொஞ்சி விளையாட நீ ஆடி வா
தடை மீறி போராட சதிராடி வா
செந்தமிழே நீ பகைவென்று முடிசூடி வா

(ஆடி வா…)

மயிலாட வான்கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ

(ஆடி வா…)

உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ
அதன் உரிமைக்கு உரியவர்கள் நாம் அல்லவோ
புயலுக்கும் நெருப்புக்கும் திரைபோடவோ
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ

(ஆடி வா…)

1967-ம் ஆண்டு வெளிவந்த எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ‘அரசக்கட்டளை’  திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை எழுதியவர் கவிஞர் முத்துகூத்தன்.

You might also like