தியாகத் திருநாளின் வரலாறும் நினைவுகூரலும்!

தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாட என்ன காரணம் மற்றும் அதன் சிறப்புகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

ஆண்டுதோறும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மாதமான துல் ஹஜ்’ஜின் 10வது நாளில் ‘பக்ரீத்’ கொண்டாடப்படுகிறது.

நடப்பாண்டில் இன்று (ஜூன் – 29) பக்ரீத் கொண்டாடப்படுகிறது. வளைகுடா நாடுகளில் நேற்றே பக்ரீத் கொண்டாடப்பட்டது.  

பக்ரீத் பண்டிகை தினத்தில் காலையில் தொழுகை செய்வது தான் முக்கியமாக கடைபிடிக்கும் சடங்கு. உலக அளவில் இஸ்லாமியர்கள் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் பக்ரீத் ஒன்றாகும்.

பக்ரீத் கொண்டாட காரணம்!

இஸ்லாமியர்களின் தூதுவராக நம்புவதில் ஒருவர், இப்ராஹிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார்.

நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த இப்ராஹிமிற்கு இறைவன் அருளால், இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

இஸ்மாயீஸ் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அரபியர்கள் என்று நம்பப்படுகிறது.

பக்ரித் பண்டிகையின் சிறப்பு என்ன? – தியாகத் திருநாள் எப்போது?

இப்ராஹிமின் மகன் இஸ்மாயீல் பால்ய பருவத்தை அடைந்தபோது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள் இப்ராஹிமின் கனவில் தோற்றி அறிவுறுத்தினார். இதை பற்றி இப்ராஹிம் மகனின் அனுமதியுடன் பலியிட துணிந்தார்.

அப்போது கடவுள், சிஃப்ரயீல் என்ற வான தூதரை அனுப்பி இஸ்மாயீலை பலியிடுவதை தடுத்து நிறுத்தினார்.

பின் அங்கிருந்த ஆடு ஒன்றை பலியிட கடவுள் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாக திருநாள் கொண்டாடப்படுகிறது.

தொழுகை

வழக்கமாக இஸ்லாமியர்கள் அனைவரும் பள்ளிவாசலில் ஒன்று கூடி தொழுகை முடித்தபின், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து இனிப்புகளை பரிமாறி கொள்வர். ஆனால், இந்த ஆண்டு அவ்வாறு கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதனால், இஸ்லாமியர்கள் வீடுகளில், காலையிலேயே எழுந்து குடும்பத்துடன் தொழுகையில் ஈடுபடலாம். அத்துடன், ஒவ்வொருவரும் வீட்டிலேயே உணவு சமைத்து உண்பது சிறந்தது.

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்று

இஸ்லாமியர்களுக்கு ஐந்து கடமைகள் உள்ளது. அதை அவர்கள், தங்கள் வாழ்நாளில் கட்டாயம் கடைப்பிடித்திருக்க வேண்டும்.

1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதை முழுமையாக நம்ப வேண்டும்.

2. இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரும் இறைவனை தொழ வேண்டும். முடியாதவர்கள் உட்கார்ந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ கட்டாயம் தொழுகையில் ஈடுபட வேண்டும்.

3. நோன்பிருத்தல் வேண்டும்.

4. வசதி படைத்தோர் ஏழைகளுக்கு தானம் வழங்க வேண்டும்.

5. ஹச் பயணம் செய்ய வேண்டும். அதற்கு சென்று வர பண வசதி, தக்க உடல் நலமும், வழி துணையும் உள்ளவர்களுக்கு இது கடைமையாகிறது.

இந்த ஹச் பயணம் பக்ரீத்தின் போதுதான் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவலால் ஹஜ்க்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆட்டுச்சந்தை

தமிழகத்தில் பெருமளவில் ஆடு விற்பனை நடக்க பக்ரீத் பண்டிகை முக்கிய காரணமாக உள்ளது.

பக்ரீத் பண்டிகை வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தமிகம் முழுவதும் ஆட்டுச் சந்தைகளில் விற்பனை களைக்கட்டத் தொடங்கும்.

இங்கு ஆடுகளின் எடையை பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த ஆண்டும் சில இடங்களில் ஆடு விற்பனை நடைபெற்றது. ஆனால், கடந்த ஆண்டைபோல் இந்த ஆண்டு விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

அதேபோல், ஆடுகள் வாங்கும் இஸ்லாமிய குடும்பத்தினார், அதை பங்கிட்டு உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் வழங்குவர்.

நன்றி: முகநூல் பதிவு

You might also like