அரபு நாடுகளில் தமிழ்ப் பாடங்கள்!

சவுதி அரேபியாவிலுள்ள பள்ளிகளில் 3 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழிப்பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது.

அங்கு தமிழ் பாடநூல்கள் கிடைப்பதில்லை என்பதால், திமுக அயலக அணியின் முன்னெடுப்பில், அறக்கட்டளை மூலம் தமிழ்நாடு பாடநூல் கழகத்திடமிருந்து 700 தமிழ் மொழிப்பாடநூல்களை ரூ.79,250-க்கு வாங்கி வழங்கியுள்ளார்கள்.

இந்த நூல்களை சவுதியில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு வழங்கும் வண்ணம் அயலக அணி நிர்வாகிகளிடம் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒப்படைத்தார்.

அப்போது அரபு நாடுகளின் தமிழ் மாணவர்களுக்கும் அவர் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

You might also like