‘அஞ்ஞாடி’ பூமணி வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு! 

கோவில்பட்டியில் உலக புத்தகதினத்தையொட்டி புத்தக வெளியீட்டு விழா சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் இல்லத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற துணை தலைவர் திருமலை முத்துசாமி தலைமை வகித்தார்.

பணி நிறைவு பெற்ற நூலக ஆய்வாளர் பூல் பாண்டி முன்னிலை வகித்தார்.

பத்திரிகையாளர் கோவில்பட்டி இராமா. மாரியப்பன் எழுதிய “என்னை குப்பைத் தொட்டியில போடு” என்ற சிறுகதை நூலினை சாகித்திய அகாடமி விருது பெற்ற அஞ்ஞாடி நூலாசிரியர் பூமணி வெளியிட ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் முத்துச்செல்வம் பெற்றுக்கொண்டார்.

நூலாசிரியர் இராமா. மாரியப்பன் ஏற்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பணி நிறைவு பெற்ற வேளாண்மை துறை கண்காணிப்பாளர் நடராஜன்,பாரதி அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You might also like