அரசுப் பள்ளிகளில் சோ்க்க முன்வர வேண்டும்!

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்கும் பொருட்டு ஏப்ரல் 17 முதல் 28-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் வாகனங்கள் மூலம் விழிப்புணா்வு பரப்புரை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுதொடா்பாக சென்னை கொளத்தூரில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி.கே.சேகா்பாபு ஆகியோர் கலந்து கொண்டு பரப்புரை வாகனங்களை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா்.

அப்போது செய்தியாளா்களிடம் பேசிய அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “தமிழகத்தில் 28 தகைசால் பள்ளிகள், 25 மாதிரிப் பள்ளிகளைத் தொடங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, மாதிரிப் பள்ளிகள் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்படும்” என்றுக் கூறினார்.

You might also like