குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் உலகமடா!

நினைவில் நிற்கும் வரிகள்:

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா – இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா
இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா – வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா – தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

(குறுக்கு வழியில்…)

விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும் – மனம்
வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் பல வரட்டு கீதமும் பாடும்
விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா – தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா
அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தைக் குரங்கு தாவும் – அதன்
அழகைக் குலைக்க மேவும்

கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும் – சிலர்
குணமும் இது போல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா – தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா
(குறுக்கு வழியில்…)

– 1957-ம் ஆண்டு வெளிவந்த ‘மகாதேவி’ திரைப்படத்திற்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் வரிகள்

You might also like