ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஆசிய கண்டத்தில் தீவு நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள அமோரியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் நேற்று மாலை 6.18 மணிக்கு 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. எனினும், இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

இதேபோல் ஆப்கானிஸ்தானிலும் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 5.49 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

You might also like