நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவை சூழ்ந்த வெள்ளம்!

துருக்கி எல்லையிலுள்ள ஒரேண்டஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நதியின் அணை உடைந்ததால், சிரியாவின் அல்-துலுல் என்ற கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் இட்லிப் மாகாணத்திலுள்ள பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ஏற்கனவே கடும் குளிரில் இடிபாடுகளுக்கு மத்தியில் அந்நாட்டு மக்கள் அவதியுற்று வரும் நிலையில், தற்போது சிரியாவின் வடமேற்கு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால், இப்பகுதிகளிலுள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள மேடான பகுதிகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஒரேண்டஸ் நதியால் சிரியா – துருக்கி எல்லைப் பகுதிகளிலுள்ள மக்கள் பயன்பெற்று வந்த நிலையில், நிலநடுக்கத்தால், நதியின் வெள்ளம் கிராமப் பகுதிக்குள் புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like