பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் ‘தண்டகாரண்யம்’!

இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். தயாரிப்பாளராக பல வெற்றிப் படங்கள் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜெ பேபி, இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.

இந்நிலையில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குனர் அதியன் ஆதிரை இரண்டாவது படமாக ‘தண்டகாரண்யம்’ படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் டைட்டில் வெளியாகியிருக்கிறது.

இந்தப் படத்தை நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இணைத் தயாரிப்பாக நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் பி.லிட். இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் தினேஷ், கலையரசன், ஷபீர், பால சரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ், யுவன் மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

முதல்கட்டமாக ஓசூர் மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

You might also like