தமிழகத்தின் 28-வது செஸ் கிராண்ட் மாஸ்டரானார் பிரனேஷ்!

தமிழகத்தைச் சேர்ந்த செஸ் மாஸ்டர் பிரனேஷ் இந்தியாவின் 79-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழகத்தின் 28-வது செஸ் கிராண்ட்மாஸ்டராகவும் தேர்வாகி உள்ளார்.

இவர் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி, ஆசிய செஸ் போட்டியில் தங்கம், 16 வயதுக்கு உட்பட்ட சர்வதேச செஸ் தொடரில் வெண்கலம் ஆகியவற்றை வென்றுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவரான பிரனேஷ் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

தந்தை முனிரத்தினம் ஜவுளிக்கடை ஒன்றில் கணக்கராகவும், அம்மா மஞ்சுளா அங்கன்வாடி பணியாளராகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like