விரைவில் நடைமுறைக்கு வரும் பெங்களூரு – சென்னை விரைவுச்சாலை!

பெங்களூருவிலிருந்து சென்னை வரை ரூ. 16,730 கோடி மதிப்பில் 262 கி.மீ. தொலைவுக்கு 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்த விரைவுச் சாலையானது கர்நாடகத்திலிருந்து ஆந்திர மாநிலம் வழியாக தமிழகத்தை இணைக்கிறது.

இந்நிலையில், இந்த விரைவுச் சாலையின் கட்டமைப்புப் பணிகளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஹெலிகாப்டரில் சென்றபடி வான்வழி ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பின்னர் பேசிய ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி சுமார் ரூ.17,000 கோடியில் தயாராகிவரும் இந்த பசுமைவழிச் சாலை திட்டத்தால், இரு நகரங்களுக்கு இடையேயான பயணம் மிக விரைவானதாக இருக்கும் என்றும் இந்த சாலை திறக்கப்பட்டால், மிக முக்கிய நகரங்களுக்குள் சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்குவது தவிர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

You might also like