உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு நடத்தத் தயார்!

– ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 300 நாட்களை கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் போரில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்குத் தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்தப் போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

இதனிடையே ரஷியாவும் உக்ரைனும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

உக்ரைன் போர் தொடர்பாக அறிவித்த புதின், “அனைத்துத் தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம். ஆனால், உக்ரைனும் அதன் ஆதரவு மேற்கத்திய நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையை ஏற்க மறுக்கின்றன.

அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை பிளவுபடுத்த நினைக்கின்றன. புதின், நாட்டு நலனை காக்கவும், மக்களின் நலனை காக்கவும் நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

You might also like