பழநி கோயில் தங்க கோபுர தூய்மைப் பணி தொடக்கம்!

பழநி கோயில் குடமுழுக்குப் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தங்கக் கோபுரத்தை தூய்மை செய்யும் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு கடந்த 2006ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது.

2018ம் ஆண்டு நடந்திருக்க வேண்டிய நிலையில் குடமுழுக்கு விழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது பொறுப்பேற்ற தி.மு.க அரசு குடமுழுக்கு பணியை துரிதப்படுத்தியுள்ளது.

குடமுழுக்கு விழாவையொட்டி பழநி மலைக்கோயிலில் சேதம் அடைந்த மண்டபங்கள் மற்றும் தூண்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தற்போது கோபுரங்கள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

குடமுழுக்குப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று கருவறையின் மேல் உள்ள தங்கக் கோபுரத்தை தூய்மை செய்யும் பணி நடந்தது.

ஆகம விதிப்படி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தண்ணீர் பீய்ச்சி அடித்து சுத்தம் செய்யப்பட்டது. 

பழநி கோயிலில் குடமுழுக்குப் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

You might also like