பிறந்தோம், வளர்ந்தோம் என்பது வாழ்க்கை?

நினைவில் நிற்கும் வரிகள்:

***

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா

(ஆடி….)

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் கால் இல்லா கட்டிலடா

(ஆடி….)

பிறந்தோம் என்பதே முகவரியாம்
பேசினோம் என்பதே தாய் மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்

(ஆடி….)

சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்

(ஆடி….)

வகுப்பார் அது போல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை (2)
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை

(ஆடி….)

– கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1965-ம் ஆண்டு வெளிவந்த ‘நீர்க்குமிழி’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் உவமைக் கவிஞர் சுரதா.

You might also like