ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் டிராவில் முடிந்த கால்பந்தாட்டம்!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில், டென்மார்க் – துனிசியா அணிகள் ஒரு கோல்கூட அடிக்க முடியாமல் போனதால் போட்டி சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் டென்மார்க் – துனிசியா அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடினர்.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனை தொடர்ந்து நடந்த 2வது பாதி ஆட்டத்திலும் கோல் எதுவும் அடிக்கப்படாதால், ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

You might also like