தமிழ் பண்புக்கு நான் அடிமை…!

நினைவில் நிற்கும் வரிகள்:

அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை

(அன்புக்கு நான்…)

இன்பங்கள் இங்கே பொங்கி வழியும்
முகங்கள் நான் பார்க்கிறேன்
இதயம் எல்லாம் பாலைவனம் போல்
இருக்கும் நிலை பார்க்கிறேன்
அன்பு பணிவு அடக்கம் எங்கே
தேடிப் பார்த்தேன் தென்படவில்லை

(அன்புக்கு நான்…)

குடிக்கும் நீரை விலைகள் பேசி
கொடுக்கும் கூட்டம் அங்கே
இருக்கும் காசை தண்ணீர் போலே
இரைக்கும் கூட்டம் இங்கே
ஆடை பாதி ஆளும் பாதி
அறிவும் பாதி ஆனது இங்கே

(அன்புக்கு நான்…)

உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று
உறவு கொண்டீர்களே
கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை
மறந்து போனீர்களே
நாகரீகம் என்பது எல்லாம்
போதையான பாதை அல்ல

(அன்புக்கு நான்…)

– 1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘இன்று போல் என்றும் வாழ்க’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம்.

You might also like