ஆசியக் குத்துச்சண்டை; இறுதிப் போட்டியில் லவ்லினா!

ஆசியக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டானில் நடந்து வருகிறது. இந்த தொடரின் அரையிறுதி போட்டிகள் நேற்று தொடங்கியது.

இதில் 12 இந்திய வீரர், வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளதால் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு ஏற்கனவே 12 பதக்கங்கள் உறுதியாகி இருந்தன.

இந்நிலையில், பெண்களுக்கான அரையிறுதிப் போட்டி நேற்று தொடங்கியது. 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன் கொரிய குடியரசின் சியோங் சுயோனை எதிர்கொண்டார்.

தொடக்கம் முதலெ புத்திசாலித்தனமாக ஆடிய லவ்லினா இறுதியில் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

இதன் மூலம் அவர் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

You might also like