‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்: துபாயில் வெளியீடு!

கவிஞர் வைரமுத்துவின், ‘கள்ளிக்காட்டு இதிகாசம்‘ என்ற நூல் கடந்த 2000-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 2003-ம் ஆண்டு இந்த நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

“இதைத்தொடர்ந்து 23 மொழிகளில் இந்த நூலை சாகித்ய அகாடமி மொழி பெயர்த்து வருகிறது. இந்தி, உருது, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த நாவல் வெளியாகியுள்ளது.

மிகவேகமாக விற்பனையாகி வரும் இந்த நாவல், இதுவரை 33 பதிப்புகளை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ஒன்றரை லட்சம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.

தற்போது, இந்த நாவலின் ஆங்கில மொழி பெயர்ப்பு தயாராகி உள்ளது. கீதா சுப்பிரமணியம் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

கள்ளிக்காட்டு இதிகாசத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘தி சாகா ஆப் தி காக்டஸ் லேண்ட்‘ எனப்படும் இந்த நூல் துபாய் அட்லாண்டிஸ் ஓட்டலில் நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெற உள்ள சர்வதேச மாநாட்டில் வெளியிடப்படுகிறது.

மாநாட்டில் கவிஞர் வைரமுத்து, கள்ளிக்காட்டு இதிகாசத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூலை வெளியிடுகிறார்.

You might also like