கல்லூரி மாணவி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்தியப் பிரியா, ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையே கொலையாளி சதீசை காவல்துறையினர் கைது செய்தனர்.

இரவு முழுவதும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்ற பின், பலத்த பாதுகாப்புடன் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து சதீசை 28ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கல்லூரி மாணவி சத்தியப் பிரியா ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறை விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

You might also like