ஆஸ்கர் ரேஸில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்.!

பாகுபலி திரைப்பட வெற்றிக்குப் பிறகு எஸ்.எஸ். ராஜமௌலியின் சமீபத்திய பிரம்மாண்ட வெற்றி திரைப்படம் தான் ஆர்ஆர்ஆர்.

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த இந்தப் படம் உலகளவில் ரூ.1100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து, அதிக வசூல் செய்த மூன்றாவது இந்தியத் திரைப்படம் பெருமையைப் பெற்றது.

ஆர்ஆர்ஆர் திரைப்படம் சுமார் 19 வது வாரம் வரை நெட்பிலிக்ஸில் முதல் 10-வது உலகளாவிய படங்களில் ஒன்றாக இருந்து வந்தது.

இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ நுழைவுப் படமாக ஆர்ஆர்ஆர் இருக்கும் என்று ஒட்டுமொத்த திரையுலகமும் ரசிகர்களும் எதிர்பார்த்தனர்.

ஆனால், அதற்கு பதிலாக குஜராத்தி திரைப்படமான ‘செல்லோ ஷோ’ அகாடமி விருதுகளுக்கு இந்தியாவால் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்போது, ​​’ஆர்ஆர்ஆர்’ படக்குழு தாங்களாகவே ஆஸ்கர் விருதுக்கு விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளனர்.

திரைப்படத்தை 15 பிரிவுகளின் கீழ் ஆஸ்கார் பரிசீலனைக்கு விண்ணப்பித்துள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆர்ஆர்ஆர். படக்குழு தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

You might also like