தேங்கிக் கிடந்த 13,000 வழக்குகள் தள்ளுபடி!

உச்சநீதிமன்றம் அதிரடி

உச்சநீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலுவை எண்ணிக்கையை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இதன்படி, 2014-க்கு முன் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணையில் எந்த முன்னேற்றமும் இன்றி தேங்கிக் கிடந்த 13 ஆயிரத்து 147 வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிமன்ற பதிவாளர் சிராக் பானு சிங் நேற்று உத்தரவிட்டார்.

இதில், 1987-ல் தாக்கல் செய்த ஒரு வழக்கும் உள்ளது. கடந்த 1-ம் தேதி நிலவரப்படி, உச்சநீதிமன்றத்தில் 70 ஆயிரத்து 310 வழக்குகள் நிலுவையில் இருந்தன.

You might also like