உலகம் சுற்றும் லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா

யுவன் ஷங்கர் ராஜா மீதும் அவரது இசையின் மீதும் ரசிகர்கள் கொண்டுள்ள அன்பிற்கு எல்லையில்லை.

மலேசியாவில் நடந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 45 நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்ததே அதற்கான சான்று. மலேசியாவில் இதுபோன்ற ஒரு சாதனை நடப்பது இதுவே முதல்முறை.

அது மட்டுமின்றி, மலேசியாவில் தொடர்ந்து இரண்டு நாட்கள் இசை நிகழ்ச்சி நடத்திய ஒரே கலைஞர் யுவன் மட்டும்தான்.

இந்த உற்சாகம் மற்றும் வரவேற்பைப் பார்த்து, உலகம் முழுவதும் குறைந்தது ஏழு இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு லிட்டில் மேஸ்ட்ரோ அணுகப்பட்டுள்ளார்.

திரையுலகில் யுவன் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி கோலாலம்பூர் ஆக்சியாட்டா அரங்க வளாகத்தில் நடத்தப்பட்டது.

இரண்டு நாள் இசை நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பில் மிகவும் மகிழ்ச்சியடைந்த யுவன் சமூக ஊடகம் வாயிலாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
சென்னையில் விரைவில் இசை நிகழ்ச்சி நடத்தப்போவதாக சமீபத்தில் யுவன் அறிவித்திருந்தார்.

இந்த கச்சேரிக்கு ‘யு & ஐ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 10-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிக்கு அரைஸ் என்டர்டெயின்மென்ட் ஏற்பாடு செய்துள்ளது.

அறிவிப்பு வெளியானது முதல், இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியை கண்டும் கேட்டும் களிக்க யுவனின் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

11 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார் யுவன்.

You might also like