ஒரே நாளில் நான்கு காவலர்கள் தற்கொலை!

தமிழகத்தில் இரு தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் நான்கு காவலர்கள் தற்கொலை மூலம் உயிரிழந்திருக்கிறார்கள். இது குறித்து இந்து தமிழ் திசை நாளிதழின் வெளியான தலையங்கத்திலிருந்து ஒரு பகுதி.

மக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையிலான நல்லுறவை வளர்த்தெடுக்கும் வகையில், காவல் நிலையங்களில் வரவேற்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ள காவலர்களுக்கு மனநலப் பயிற்சிகளை அளிப்பதற்காகவே தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. காவலர் நிறைவாழ்வுப் பயிற்சித் திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கானவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டுப் பட்டயங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு மாவட்டந்தோறும் காவலர்கள் மனநல ஆலோசனைகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரையில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காவலர்களுக்கு மனநலப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இவற்றைத் தவிர, காவல் துறை இயக்குநர் த.சைலேந்திரபாபு தனது இணையதளத்தில் மனநலம் குறித்துத் தொடர்ந்து எழுதிவருகிறார். காவலர்களின் மனநலம் சார்ந்து அரசு இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டுள்ள போதிலும்கூட, காவலர்களின் தற்கொலைகள் அவ்வப்போது தொடர்வது வருத்தமளிக்கிறது. இவ்விஷயத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

– நன்றி இந்து தமிழ் திசை

You might also like