நீதிபதிகளை விமா்சிக்கவும் ஒரு எல்லையுண்டு!

கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் பீட்டா் மச்சோடா உள்ளிட்ட சிலா் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனா்.

அந்த மனுவில், இனம், மொழி, ஜாதி அடிப்படையில் நிகழ்த்தப்படும் குற்றங்களில் கடந்த 2018-இல் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்யகாந்த் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் பரிசீலனைக்கு வந்தது. அப்போது, இந்த மனு மீதான விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், கடந்த முறை நீதிபதிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க முடியவில்லை என்று கூறினர்.

ஆனால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தாமதமாவதாக செய்தி வெளியிட்டுள்ளீா்கள் என்றும், நீதிபதிகளை விமா்சிப்பதற்கு ஒரு எல்லை உண்டு என்றும் கூறிய நீதிபதிகள்,

எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் என்று கேட்டதோடு, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாவிட்டால் மேலும் ஒரு செய்தியை வெளியிடுவீா்கள் என்றும் நீதிபதிகள் விமர்சித்தனர்.

You might also like