எஸ்.பி.பி பாடிய கடைசி இசை ஆல்பம் விரைவில் வெளியீடு!

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர் கடையாகப் பாடிய ‘விஸ்வரூப தரிசனம்’ என்ற இசை ஆல்பத்தை, சிம்பொனி நிறுவனம் வெளியிடுகிறது.

மகாபாரதப் போரின்போது, அர்ஜுனனுக்கும், கிருஷ்ணருக்கும் இடையே நடந்த உரையாடலின் இசை சித்தரிப்பு மற்றும் பகவத் கீதையின் மெய்பொருளே இந்த ஆல்பம் எஸ்.பி.பி., பாடிய இப்பாடலை, குருநாத சித்தர் எழுதி, கே.எஸ். ரகுநாதன் இசையமைத்துள்ளார்.

இப்பாடல், டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகிறது. இந்த ஆல்பம், நான்கு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like