உன்னைப் பார்ப்பது…!

ஒரு புகைப்படத்தை பார்ப்பதுபோலவே
இருக்கிறது
நான் ஒருபோதும் நுழைய முடியாத
அல்லது
ஒருபோதும் வெளியேற முடியாத
ஒரு காலத்தின் தனிமையில்
உன்னைத் தொடுவது
ஒரு பிம்பத்தைத் தொடுவதாகவே இருக்கிறது

இப்போது நீ
என்னை முத்தமிடுகிறாய்
ஒரு புகைப்படத்தின் பின்புறமிருக்கும்
ஒரு கையெழுத்தைப் போல
அது சலனமற்றிருக்கிறது!

– மனுஷ்ய புத்திரன்

புதிய பார்வை, மார்ச் 1 – 15, 2006.

You might also like