‘ஜோதிகா – 51’ படத்தை இயக்கப்போவது யார்?

ஜோதிகா திருமணத்துக்குப் பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்துவிட்டு, மீண்டும் ‘36 வயதினிலே’ படம் மூலம் நடிக்க வந்தார்.

தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.

ஜோதிகா நடித்த 50-வது படமான ’உடன்பிறப்பே’ சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், அடுத்து 51-வது படத்தில் நடிக்க ஜோதிகா தயாராகி உள்ளதாகவும் சில இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்லி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பிரியா சொன்ன கதை ஜோதிகாவிற்கு பிடித்துள்ளதாகவும், அதில் நடிக்க ஜோதிகா முடிவு செய்து இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

04.02.2022   12 : 30 P.M

You might also like