அ.தி.மு.க. விரைவில் என் கைக்கு வரும்!

– வி.கே.சசிகலா நம்பிக்கை

பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அண்ணா புகைப்படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா, “அண்ணாவின் இதயக்கனியாக எம்.ஜி.ஆர். இருந்தார். இயக்கத்தைத் தொடங்கினார்.

நாங்களும் அண்ணாவை வணங்குகிறோம். எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணாவின் தொண்டர்கள் இந்தத் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெறுவர்.

நிச்சயம் விரைவில் அ.தி.மு.க. நமது கைக்கு வரும். ஜெயலலிதாவின் ஆசையை உறுதியாக கொண்டு வருவோம். எந்தக் கட்சியாக இருந்தாலும், கட்சியை தற்போது மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். தொண்டர்கள் பொதுமக்கள் எல்லோரையும் நினைத்து செயல்பட வேண்டும்.

எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செயல்படக்கூடாது. அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் காரணத்தினால் தற்போது தொண்டர்களை சந்திக்க இயலவில்லை.

மிக விரைவில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்திப்பேன். கடந்த 8 மாத காலத்தில் ஆட்சியைப் பற்றி மக்கள் புரிந்து இருப்பார்கள். யார் இருந்தால் நன்றாக இருக்கும் என மக்கள் புரிந்து கொண்டார்கள்” எனக் கூறினார்.

04.02.2022 12 : 30 P.M

You might also like