வீணருக்கு உழைத்து ஓயமாட்டோம்!

நினைவில் நிற்கும் வரிகள்

****

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று

(ஆடுவோமே…) 

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
இதைத் தரணிக்கெல்லாம் எடுத்தோதுவோமே

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்

வீழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம்
வீழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம்
வெறும் வீணருக்கு உழைத்து ஓயமாட்டோம்

(ஆடுவோமே…) 

நாமிருக்கு நாடு நமதென்பறிந்தோம்
இது நமக்கே உரிமையாம் என்பறிந்தோம்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்
பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்

(ஆடுவோமே…) 

– 1947-ம் ஆண்டு டி.ஆர். மகாலிங்கம் நடிப்பில் வெளிவந்த நாம் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் மகாகவி பாரதியார்.
குரல் – டி.கே.பட்டம்மாள். இசை – ஆர்.சுதர்சனம்

You might also like