எம்ஜிஆர் சிலைக்கு ஜி.வி.மணிமாறன் மாலை அணிவித்து மரியாதை!

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான பொன்மனச் செம்மல் திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் 105வது பிறந்தநாள் நேற்று (17.01.2021) உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களாலும், தொண்டர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி, மரியாதைக்குரிய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் எனப் பலரும் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

இதேபோல், ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திரு. ஜி.வி.மணிமாறன் அவர்கள், சென்னை தியாகராயர் நகர், ஆற்காடு சாலையில் இருக்கும் எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

அதோடு, அதே கட்சியைச் சேர்ந்த திரு சத்யசீலன் – மாநிலத் தலைவர், திரு சபரி சௌந்தர்ராஜன் – மாநில பொதுச்செயலாளர், விஜய் – மாநிலத் துணைத் தலைவர், கமலக்கண்ணன் – மாநில வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவில்லத்திற்குச் சென்று அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

You might also like