திருவிளக்கின் ஒளி அழகும் உனக்கு ஈடாகாது!

நினைவில் நிற்கும் வரிகள்:

****

பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காகப் பாடுகிறேன்

                   (பிள்ளைத் தமிழ்…) 

மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
நான் பாடுகிறேன்

                   (பிள்ளைத் தமிழ்…) 

நீலக் கடல் அலை போல
நீடூழி நீ வாழ்க
நெஞ்சமெனும் கங்கையிலே
நீராடி நீ வாழ்க

காஞ்சி மன்னன் புகழ் போல
காவியமாய் நீ வாழ்க
கடவுளுக்கும் கடவுளென
கண்மணியே நீ வாழ்க

                   (பிள்ளைத் தமிழ்…) 

வான மழை துளியாவும்
முத்தாக மாறாது
வண்ணமிகு மலர் யாவும்
உன் போலே சிரிக்காது

தேடி வைத்த பொருள் யாவும்
தேன் மழலை ஆகாது
திருவிளக்கின் ஒளி அழகும்
உன் அழகைக் காட்டாது

                   (பிள்ளைத் தமிழ்…) 

–  1976-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ‘ஊருக்கு உழைப்பவன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம்.

You might also like