அன்பினால் செழிக்கும் உலகம்!

நினைவில் நிற்கும் வரிகள்:

****

கேளடா… மானிடவா … எம்மில்
கீழோர் மேலோர் இல்லை

ஏழைகள் யாருமில்லை …
செல்வம்..ஏறியோர் என்றும் இல்லை …

வாழ்வுகள் தாழ்வுமில்லை…என்றும் ..
மாண்புடன் வாழ்வோமடா …

      (கேளடா….) 

வெள்ளை நிறத்தொரு பூனை..
எங்கள் வீட்டில் வளருது கண்டீர் …

பிள்ளைகள் பெற்றதப் பூனை –
அவை பேருக் கொருநிற மாகும்
சாம்பல் நிறமொரு குட்டி –
கருஞ் சாந்து நிறமொரு குட்டி

பாம்பு நிறமொரு குட்டி –
வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந் தாலும் –
அவை யாவும் ஒரேதர மன்றோ?

இந்த நிறம்சிறிதென்றும் –
இஃது ஏற்றமென் றுஞ்சொல்ல லாமோ?

சாதி பிரிவுகள் சொல்லி –
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்

நீதி பிரிவுகள் செய்வார் –
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.

சாதி கொடுமைகள் வேண்டாம், –
அன்பு தன்னிற் செழித்திடும் வையம்;

ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; –
தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

     (கேளடா….) 

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் –
புவி பேணி வர்த்திடும் ஈசன்;

மண்ணுக்குள்ளே சில மூடர் –
நல்ல மாத ரறிவை கெடுத்தார்

கண்க ளிரண்டினி லொன்றைக் –
குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?

பெண்க ளரிவை வளர்த்தால்
வையம் பேதைமை யற்றிடும் காணீர்.

      (கேளடா….) 

– மகாகவி பாரதி.

You might also like