சம்பளத்தில் கே.பி.எஸ் ஏற்படுத்திய சாதனை!

அருமை நிழல்:

*
திறமை எந்த இடத்திலும் அதற்கான வேகத்துடன் இருந்தால் எப்படியும் முன்னுக்கு வந்துவிடலாம் என்பதற்கு கண் முன்னாடி உள்ள உதாரணம் கே.பி.எஸ் என்றழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள்.

பிறந்தது கொடுமுடியில்.  நாடகத்தில் நுழைந்து குரல் வளத்தினால் கவனிக்கப்பட்டு, கிட்டப்பாவைத் திருமணம் செய்து கொண்டவர், கிட்டப்பா மறைவுக்குப் பிறகு துறவியைப் போல  ஒதுங்கியிருந்தார்.

பலரின் வற்புறுத்தலின் பேரில் ‘நந்தனார்’ படத்தில் நடித்தார்.

அடுத்து ‘ஔவையார்’ படத்திற்காக இவர் வாங்கிய சம்பளம் ஒரு லட்சம். அந்தக் காலத்தில் யாரும் வாங்காத சம்பளம்.

திருவிளையாடல் படத்தில் சிவாஜியுடன் நடித்த போது அவருக்கு அவ்வளவு மதிப்புக் கொடுத்து நடிக்க வைத்தார் இயக்குநர் ஏ.பி.நாகராஜன்.

அபாரமான குரல் வளத்துடன் அந்தப் படத்தில் “ஒன்றானவன் உருவில் இரண்டானவன்” என்று கணீரென்று பாடியதை மறக்க முடியுமா?

படத்தில் கே.பி.எஸ்.ஸூடன் சிவாஜி, இயக்குநர் ஏ.பி.நாகராஜன்.

You might also like