மனம்போன போக்கிலே மனிதன் போகலாமா?

நினைவில் நிற்கும் வரிகள்:

****

கண் போன போக்கிலே
கால் போகலாமா

கால் போன போக்கிலே
மனம் போகலாமா 

மனம் போன போக்கிலே
மனிதன்
போகலாமா
மனிதன் போன பாதையை
மறந்து போகலாமா

                     (கண் போன…)

நீ பார்த்த பார்வைகள்
கனவோடு
போகும்
நீ சொன்ன
வார்த்தைகள்
காற்றோடு
போகும் 

ஊர் பார்த்த உண்மைகள்
உனக்காக
வாழும்
உணராமல் போவோர்க்கு
உதவாமல் போகும் 

                       (கண் போன…)

பொய்யான சில
பேர்க்கு புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு
இது நாகரீகம்

முறையாக வாழ்வோர்க்கு எது
நாகரீகம்

முன்னோர்கள் சொன்னார்கள்
அது நாகரீகம் 

                            (கண் போன…)

திருந்தாத உள்ளங்கள்
இருந்தென்ன லாபம்
வருந்தாத
உருவங்கள்
பிறந்தென்ன லாபம்

இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்

இவர் போல
யார் என்று ஊர்
சொல்ல வேண்டும் 

(கண் போன…)

  • 1965-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘பணம் படைத்தவன்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி.
You might also like