பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது!

பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் பிரேசில் நாட்டை சேர்ந்த அமசோனியா-1 என்ற செயற்கைகோள் உட்பட 19 செயற்கைகோள்களை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை காலை 10.24 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. இதற்கான 25.30 மணி நேர கவுன்ட்டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது.

அமசோனியா 1 செயற்கைக்கோளுடன் இந்தியாவைச் சேர்ந்த இன்ஸ்பேஸ் நிறுவனத்தின் யூனிட்டிசாட் 3 செயற்கைக்கோள்கள், ஒரு சதீஸ்தவான் சாட், நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் 14 செயற்கைக்கோள்கள் உட்பட 19 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது இஸ்ரோ. இதேபோல், அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்களும் செலுத்தப்படுகின்றன.

இதில், அமசோனியா-1 செயற்கைக்கோள் பூமியில் இருந்து 637 கி.மீ தூரத்தில் அதன் புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும். இதன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள்.

இந்த செயற்கைக்கோள் காடுகள் அழிப்பைக் கண்காணிப்பதற்கு, பிரேசில் நாட்டின் விவசாயத்தைப் பகுப்பாய்வு செய்யவும் உதவும். பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் 78வது ராக்கெட் ஆகும்.

இதேபோல், பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் இந்த ஆண்டின் முதல் திட்டம் ஆகும்.

தொடர்ந்து முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள 19 செயற்கைக் கோள்களின் செயல்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

27.02.2021 12 : 56 P.M

#PSLV C51 #ISRO #பிஎஸ்எல்விசி51 #இஸ்ரோ

You might also like